Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் திருநங்கைகள் சார்பில் சமயபுரம் மாரியம்மன் திருவிழா நடந்தது.
குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் திருநங்கைகள் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கணபதி ஹோமம், கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்தகுட ஊர்வலம் நடந்தது.
மேலும் வண்ண மலர்களால், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார். ஒருங்கிணைப்பாளர் திருநங்கை மாதம்மாள் தலைமை வகித்தார்.
இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள், பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், கூழ் ஊற்றுதல், மஞ்சள் நீர் திருவீதி உலா, இரவு சிறப்பு ஆராதனை, தெருக்கூத்து ஆகியன நடந்தன.